Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கும்பகோணம்: கமலஹாசன் இந்துக்களுக்கு எதிராகவே பேசி வருவது மிகவும் கண்டிக்கதக்கது என கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் அளித்த பேட்டியில் கூறினார். அவர் மேலும் கூறும்போது, கமலஹாசன் விஷத்தை கக்கி வருகிறார்.
காந்தியின் கொள்ளுப் பேரன் எனக் கூறிக்கொள்ளும் கமலஹாசன் மற்றும் அவரது கட்சியினர் அராஜகத்தில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மேலும் திருபுவனம் ராமலிங்கம் கொலைவழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பினர் ஐ ஆய்வு செய்ய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா sபீஜீவீ கட்சியினர் தொடர்ந்து தடுத்து வருகின்றனர், இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் அர்ஜுன் சம்பத் கூறினார்.